கிரிக்கெட்
சஞ்சு சாம்சன் சதம் வீண்: பஞ்சாப் த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் கடைசிவரை போட்டியை எடுத்துக் கொண்டு சென்றும் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் அடித்தது. கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் எடுத்தார்கள்.
இதனை அடுத்து 222 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஷத் சிங் வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் சஞ்சு சாம்சன் 4 நான்காவது பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து ஆறாவது பந்தில் அவுட் ஆனதால் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


















