Connect with us

சினிமா

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் எப்படி? திரைவிமர்சனம்

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படமான ‘நெற்றிக்கண்’ படத்தின் விமர்சனம் இதோ:

சகோதரருடன் காரில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தில் பார்வை இழந்த சிபிஐ அதிகாரி நயன்தாரா, பார்வை இழப்பு காரணமாக வேலையையும் இழக்கின்றார். இந்த நிலையில் நயன்தாரா, ஒருமுறை பேருந்து நிலையத்தில் இருக்கும் போது அவரை அஜ்மல் கடத்த முயற்சி செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் நயன்தாரா அவரைப் பற்றிய தகவல்களை காவல்நிலையத்தில் கொடுக்கிறார். அதன்பிறகுதான் தன்னைக் கடத்த முயன்றவன் ஏற்கனவே பல பெண்களை கடத்தி இருக்கிறார் என்பது நயன்தாராவுக்கும் போலீசுக்கும் தெரிய வருகிறது. இதனை அடுத்து நயன்தாராவின் உதவியுடன் வில்லனை பிடிக்க போலீஸ் எடுத்த முயற்சிதான் இந்த படத்தின் மீதிக்கதை.

பார்வையற்ற வேடத்தில் நயன்தாரா சூப்பராக நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பார்வை இல்லாமல் இருந்தாலும் மூன்றாவது கண்ணான நெற்றிகண் மூலம் மிகச் சிறப்பாக அவர் செயல்படுவது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. குறிப்பாக மெட்ரோ டிரெயினில் செல்லும்போது சரனண் சக்தி கூறும் தகவல்களிலிருந்து வில்லனிடம் இருந்து தப்பிப்பது, வில்லனிடம் நேருக்கு நேர் சவால் விடுவது, வில்லனிடம் மாட்டிக் கொண்ட போதும் ஒவ்வொரு முறையும் புத்திசாலித்தனமாக தப்பிப்பது ஆகிய காட்சிகள் நயன்தாராவின் நடிப்புக்கு தீனி போடும் காட்சிகளாக அமைந்துள்ளன.

நயன்தாராவை அடுத்து இந்த படத்தில் பட்டையை கிளப்பி இருப்பது சரண் சக்தி தான். ஏற்கனவே ’கோலமாவு கோகிலா’ படத்தில் தனது நடிப்பு முத்திரையை பதித்த சரண் சக்தி இந்த படத்தில் சூப்பராக நடித்துள்ளார்.

அஜ்மல் கேரக்டர் கொஞ்சம் முரணானது என்றாலும் அவரது நடிப்பில் எந்தவித குறையும் இல்லை. படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டைகள் உள்ளன. குறிப்பாக மேல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆளாகும் அஜ்மல் மேலதிகாரிகள் முன் திமிறாக பேசுவது நம்பும்படியாக இல்லை. அதே போல் அஜ்மல் மிக சாதாரணமாக ஜெயிலில் இருந்து தப்பிப்பது நயன்தாரா அடிக்கடி கையில் கிடைத்தும் வழக்கமான தமிழ் சினிமா வில்லன்கள் போல் கோட்டை விடுவது போன்ற அபத்தமான காட்சிகளும் உண்டு.

மொத்தத்தில் நயன்தாரா ஒரே ஒருவருக்காகவும் முன்பாதி திரைக்கதைக்காகவும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chương 2346 : ta có quốc sĩ, thiên hạ vô song. Funderat på hur det skulle kännas att köra en bil som är helt tyst. ” cố yên nhi trừng mắt với cố tá ninh rồi quay đầu về phía Đại vị hi nói lời tạm biệt, “vị hi, tớ đi nhé, cậu sau khi đến thành phố c nhớ gửi tin nhắn cho tớ nha.