Connect with us

இந்தியா

படிப்புக்கு பணம் இல்லாமல் கார் கழுவியவர் இன்று ரூ.200 கோடி நிறுவனத்தின் தொழிலதிபர்.. உழைப்பால் உயர்ந்த நபர்..!

Published

on

படிப்புக்கு பணம் இல்லாமல் காவலாளி தொழிலும் கார் கழுவும் வேலையும் பார்த்த ஒருவர் இன்று ரூபாய் 200 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று கூறினால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.

இந்தூரை சேர்ந்த கௌரவ் என்பவர் பள்ளி படிப்பை இந்தூரில் முடித்து அதன் பின்னர் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படிப்பு படித்தார். அமெரிக்காவில் தனது தனது படிப்பை தொடர அவருக்கு பொருளாதார சிக்கலாக இருந்த நிலையில் அவர் சின்ன சின்ன வேலைகளை செய்தார். பணம் சம்பாதிப்பதாக அவர் பகுதி நேரமாக காவலாளி வேலை செய்தார். மேலும் கார் கழுவும் வேலையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

இந்த நிலையில் அமெரிக்காவில் நடிப்பை முடித்துவிட்டு ஒரு சில நிறுவனங்களில் வேலை பார்த்த அவர் சொந்தக்கடையும் வைத்தார். அதனை அடுத்து 2015 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து அவர் இந்தியா திரும்பினார் இந்த நிலையில் தான் அவர் தீபக் பிரம்மன் என்பவரை சந்தித்தார். இந்த சந்திப்பு தான் அவரது வாழ்க்கையை திசை மாற்றியது.

சீனாவில் இருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்யும் ஐடியாவை கெளரவ்வுக்கு தீபக் கொடுத்தார். இதனை அடுத்து அவர் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்து அந்த முதலீட்டில் சீனாவில் இருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்தார் எஸ்.எம். டாய்ஸ் என்ற பிராண்டில் அவர் விற்பனை செய்த நிலையில் நாளுக்கு நாள் வியாபாரம் அதிகரித்தது. குறிப்பாக அவர் விற்பனை செய்யும் பொம்மைகளை குழந்தைகள் மிகவும் விரும்பி வாங்கியதால் அவரது வியாபாரமும் அதிகரித்தது.

இதனை அடுத்து அவர் சீனாவில் இருந்து மட்டுமின்றி இந்திய பொம்மை உற்பத்தியாளர்களிடமிருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்தார். தற்போது அவரது நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பு செலவுக்காக அவர் கார் கழுவும் வேலை உட்பட பல வேலைகளை பார்த்த நிலையில் இன்று அவர் 200 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக இருப்பதற்கு ஒரே காரணம் அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?