செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பங்கள் எங்கு, எப்போது பெறலாம்? முழு விவரம் இங்கே!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய பயனாளிகளிடம் விருப்ப மனுக்களை அரசு பெறத் தொடங்கவுள்ளது.
அந்த நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில், இதுவரை இந்த திட்டத்தில் பயனாளியாக இல்லாதவர்கள் புதியதாக விண்ணப்பிக்கலாம்.
தற்போது தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உள்ள நிலையில், மட்டுமே 1.14 கோடி பேர் தான் இத்திட்டத்தில் உள்ளனர். அதாவது, தகுதியுள்ளவர்களுக்கே மட்டும் இந்த திட்டத்தின் பயன்கள் கிடைத்துள்ளன.
அதற்காக, திட்டத்தில் சேர தகுதி நிபந்தனைகள் என்ன என்பதை அரசு முன்பே அறிவித்துள்ளது. நீங்கள் அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், ஜூன் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், முக்கியமான கேள்வி என்னவெனில் – விண்ணப்பங்களை எங்கே, எப்போது பெறுவது?
இது தொடர்பான தகவலை தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. சில தகவலின்படி மே 29ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவும் அதிகாரப்பூர்வமல்ல.
ரேஷன் கடைகள், ஊராட்சி மன்றங்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர்கள் வழியாக விண்ணப்பங்கள் தரப்படுமா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையைப் பொருத்தவரை, அடுத்த சில நாட்களில் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொதுமக்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதான் தற்போதைய நிலை.

















