வணிகம்
ஜன் தன் யோஜனா கணக்குகளின் ஓவர் டிராப்ட் வரம்பை 10,000 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அதிரடி!

மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கீழ் திறக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் ஓவர் டிராப்ட்டினை 10,000 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
ஓவர் டிராப்ட் என்பது ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்குகளில் உள்ள இருப்பு தொகையினை விட கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கக் கூடிய வங்கி சேவை ஆகும். ஒவர் டிராப்ட் கீழ் பணம் கூடுதலாக பணம் பெறும் போது 12 முதல் 20 சதவீத வட்டி செலுத்த வேண்டும்.
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு, காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகளை எளிதாக அணுக ஜன் தன் யோஜனா எனப்படும் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லா சேமிப்பு கணக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் இந்த சேமிப்பு கணக்குகளில் ஓவர் டிராப்ட் மூலம் 5,000 ரூபாய் வரை பணம் கூடுதலாகப் பெற்று பயன்படுத்தலாம் என்று இருந்ததை தற்போது 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளனர்.
ஜன் தன் யோஜான சேமிப்பு கணக்குகளை நாடு முழுவதும் 32.41கோடி நபர்கள் திறந்துள்ளனர் என்றும் 81,200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.
மேலும் இந்த சேமிப்பு கணக்குகளில் தான் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மோசடிகள் நடைபெற்றதாகவும் இன்று வரை விசாரணை நடந்து வருகிறது.














