தமிழ்நாடு
இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு: தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு முதல் அனைத்து கல்லூரி வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே.
ஒரு சில மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் முதலாம் ஆண்டு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் இன்று மீண்டும் கல்லூரிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தடுப்பு நெறிமுறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பாக தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழையும் முன்பாகவே அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும் என்றும் அதே போல் சானிடைசர் உள்பட அனைத்து வசதிகளும் கல்லூரிகளில் செய்யப்பட்டிருக்கும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.



















