தமிழ்நாடு
பைக்கில் பயணம் செய்கிறீர்களா? மே 23 முதல் இது கட்டாயம்!
மே 23ம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மே 23-ஆம் தேதி முதல் அதாவது வரும் திங்கட்கிழமை முதல் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் உட்கார்ந்து இருப்பவரும் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டுமென்றும் பின் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் விரைவில் பின் இருக்கையில் இருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற முறை அமலுக்கு வரும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.