செய்திகள்
5 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ காப்பீடு – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

2018 செப்டம்பரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கிவருகிறது. இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல், பல லட்சம் மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
இதே வழக்கில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் அடைவார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 70 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 6 கோடி பேர் பயனடையும் வகையில், அவர்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு அட்டை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம், மூத்த குடிமக்கள் மருத்துவ செலவுகளால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள்.

















