வணிகம்
EPF பணத்தை ஓய்வுக்கு முன்பே எடுக்கலாமா? இபிஎஃப் பணம் எடுக்கும் புதிய விதிகள் முழு விவரம்!

இபிஎஃப் (Employees’ Provident Fund) என்பது தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நிதி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாகும். ஊழியரும் நிறுவமும் மாதந்தோறும் PF கணக்கில் பங்களிப்பு செலுத்துகின்றன. ஊழியரின் முழு பங்களிப்பும் இபிஎஃப் கணக்கில் சேமிக்கப்படுகின்றது. நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும், மற்றொரு பகுதி இபிஎஸ் (Employees’ Pension Scheme) கணக்கிற்கும் செல்கிறது.
பொதுவாக இபிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையை ஓய்வுக்குப் பிறகே எடுக்க முடியும். ஆனால் EPFO புதிய விதிகளின்படி, பணியில் இருக்கும் போதே சில விசேஷ சூழ்நிலைகளில் PF பணத்தை பகுதியளவில் பெற அனுமதிக்கப்படுகிறது.
முக்கிய மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு வாங்குதல் அல்லது வீட்டு புதுப்பிப்பு போன்ற அவசர தேவைகளுக்கு PF கணக்கிலிருந்து தொகையை எடுக்கலாம். நோய் சிகிச்சைக்காக முழு தொகையிலும் 100% வரை பெற முடியும். திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணத்திற்காக உங்கள் பங்களிப்பு தொகையில் இருந்து 75% வரை பெறலாம்.
வீடு வாங்க அல்லது புதுப்பிக்க திட்டமிடுபவர்கள் தங்கள் PF இருப்புத் தொகையில் 90% வரை எடுக்கலாம். உதாரணமாக, உங்கள் கணக்கில் ₹1,00,000 இருந்தால், வீட்டு தேவைக்காக ₹90,000 வரை பெற முடியும்.
தற்போதைய வேலைவாய்ப்பில் 12 மாதங்கள் சேவையை நிறைவு செய்திருந்தால், PF கணக்கில் உள்ள தொகையில் இருந்து 75% வரை எடுக்க அனுமதி உள்ளது. வேலை விட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால், உங்கள் முழு PF தொகையையும் திரும்பப் பெற சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய EPFO விதிகளின் படி, முன்பு 5 முதல் 7 ஆண்டுகள் சேவை செய்த பிறகே முழுத் தொகையை எடுக்க முடிந்த நிலையில், தற்போது சில நிபந்தனைகளின் கீழ் 12 மாத சேவைக்குப் பிறகே 100% வரை PF தொகையை திரும்பப் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது.















