வேலைவாய்ப்பு
டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 24ம் தேதிக்குள் கடைசி வாய்ப்பு!
தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் மார்ச் 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக கடந்த ஆண்டு 500 மையங்கள் தொடங்கப்பட்டன. இவை காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படுகின்றன.
நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிபுரிய ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு சுகாதார ஆய்வாளர், மற்றும் ஒரு துணை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீதமுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறப்பதற்காக டாக்டர்கள், நர்சுகள், மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
பணியிட விவரங்கள்:
- மொத்த காலிப்பணியிடங்கள் – 208 டாக்டர்கள், 832 மருத்துவ பணியாளர்கள்
- மாத சம்பளம்:
- டாக்டர்கள் – ரூ. 60,000
- நர்சுகள் – ரூ. 18,000
* விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 24, 2025
* நேர்முகத் தேர்வு தேதி: ஏப்ரல் 1, 2025
* முடிவுகள் வெளியிடும் நாள்: ஏப்ரல் 2, 2025
இந்த பணியிடங்களை எதிர்பார்த்துள்ளவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதார சங்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.











