தமிழ்நாடு
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு வேலை: மேயர் உறுதி
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநகராட்சியில் வேலை தரப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார்.
தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் சமீபத்தில் சித்திரை தேரோட்டம் நடந்த போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக, திமுக மற்றும் தமிழக அரசின் தரப்பில் இருந்து நிதி உதவி செய்யப்பட்டது .
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். தஞ்சை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் விடுத்த கோரிக்கையை அடுத்தே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வ் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்படும் என தஞ்சை மாநகராட்சியில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.