தமிழ்நாடு
உச்சத்திற்கு செல்லும் கொரோனா: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்றைய ஆலோசனைக்குப் பின் அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்று 6618 பேர்களும், சென்னையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களும் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இன்றைய ஆலோசனையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இபாஸ், பேருந்துகளில் கட்டுப்பாடு, திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுப்பார்கள் உடன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

















