வணிகம்
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு? – PIB வெளியிட்ட உண்மை தகவல்

ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்ந்ததா? – மத்திய அரசு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தியாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இது பலரிடையே உற்சாகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் PIB உண்மைச் சரிபார்ப்பு குழு இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. “ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்படவில்லை, இதுபோன்ற எந்தத் தீர்மானத்தையும் மத்திய அரசு எடுக்கவில்லை” என உறுதிப்பட தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த செய்தி முழுமையாக போலி தகவல் என்பதையும், அரசு சார்பில் இதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் PIB Spokesperson தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஓய்வூதியம் அதிகரிப்பு, பிஎப் வட்டி உயர்வு போன்ற நம்பிக்கையூட்டும் செய்திகளும் அடிக்கடி சமூக ஊடகங்களில் பரவுகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் அதிகாரப்பூர்வம் அல்ல. எனவே பொதுமக்கள் யாரும் இவ்வாறான செய்திகளை நம்ப வேண்டாம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும், தவறான தகவலால் ஏமாறாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
















