வணிகம்
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை | குஷியான அறிவிப்பு வருமா?
Published
5 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு நாளை (டிசம்பர் 22, 2025) முக்கிய முடிவை எடுக்கலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் காலை 10 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று, அரசு ஊழியர் சங்கத் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
நாளைய பேச்சுவார்த்தையில்,
2004-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு OPS வழங்கும் சாத்தியக்கூறுகள்,
சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள்,
அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு Hybrid Pension Model,
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)
ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனுடன், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது போன்ற கோரிக்கைகளும் ஆலோசனைக்குள் வரக்கூடும்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், OPS மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய அழுத்தத்தில் திமுக அரசு உள்ளது. கடந்த தேர்தல்களில் தபால் வாக்குகள் ஆளும் கட்சிக்கு எதிராகச் சென்றதாகக் கூறப்படுவதால், அரசு ஊழியர்களின் அதிருப்தியை போக்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடி கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அமைச்சர் ஐ. பெரியசாமி,
“முதலமைச்சர் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்”
என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
OPS திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு கடைசி மாதச் சம்பளத்தின் 50% ஓய்வூதியமாக உறுதியாக வழங்கப்படும். மேலும், பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படியும் உயர்த்தப்படும். இதற்கு மாறாக, NPS சந்தை சார்ந்த முதலீடு என்பதால், ஓய்வூதியத் தொகைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நாளைய பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டால், அது தமிழகத்தின் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி அறிவிப்பை வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

“8வது ஊதியக்குழு TOR-ல் ஓய்வூதியத் திருத்தம் ஏன் இல்லை?—குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வரும்?”

பழைய ஓய்வூதியத் திட்டம் மீட்பு கோரிக்கை: கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு ஊழியர்கள் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? – அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

அரசு ஊழியர்களின் அதிருப்தி – 2026 தேர்தலில் திமுகவுக்கு சவாலாகுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படாது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

அடல் பென்ஷன் யோஜனா: மாதம் ₹210 செலுத்தினால் 60க்கு பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்! முழு விவரம் இதோ


















