ஆன்மீகம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் வக்ரமாவும் சனி! இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

மீன ராசியில் 30 வருடங்களுக்குப் பிறகு வக்ரமாகும் சனி பகவான்! அதிர்ஷ்டம் பெற்ற 3 ராசிகள்
ஜோதிடக் கணிப்புகளின்படி, சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீன ராசியில் வக்ரமாக (பின்னோக்கி) பயணிக்கவுள்ளார். இது ஜூலை 2025 இல் நடைபெறுகிறது.
சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமாக இருப்பதால், அவருடைய சிறிய நகர்வுகளும் கூட மனித வாழ்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். ஜூலை மாதத்தில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் அதற்கான தாக்கங்கள் தெரியும்.
இந்த வக்ர நிலைச்சியில், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகப்போகிறது. தொழில், பணம், செல்வாக்கு என பலருக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும். அதிலும் கீழ்க்கண்ட மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் காத்திருக்கின்றன.
♒ கும்பம் (Aquarius):
சனி பகவான் கும்ப ராசியின் 2வது வீட்டில் வக்ரமாக இருப்பதால், நிதி நிலை முன்னேறும். கடின உழைப்புக்கான பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்பு, எழுத்துத்துறை போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் உருவாகும். உங்கள் அறிவு மற்றும் அனுபவம் உங்கள் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும். பணம் சேர்க்கும் வாய்ப்பு அதிகம்.
♊ மிதுனம் (Gemini):
மிதுன ராசியின் 10வது வீட்டில் வக்ரமாகும் சனி, தொழிலில் முன்னேற்றம் தருகிறார். வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகள். வணிகத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் கைக்கூடும். அரசு வேலை அல்லது அதிகாரப்பூர்வ பதவிகளில் இருப்பவர்கள் சாதகமான பருவத்தைக் காண்பார்கள். தந்தையால் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
♓ மீனம் (Pisces):
மீன ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாக இருப்பதால், வாழ்க்கை முழுமையாக மேம்படும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். வீட்டிலும் வேலைக்கும் முழுமையான ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், எண்ணெய், மெட்டல் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு லாபம். திட்டமிட்ட செயல்கள் வெற்றிகரமாக முடியும்.



















