செய்திகள்
ஜூலை 15 முதல் தட்கல் டிக்கெட் பதிவு – ஆதார் OTP கட்டாயம்!

தட்கல் டிக்கெட் பதிவு முறையில் புதிய மாற்றம்: ஆதார் OTP கட்டாயம்!
இந்திய ரயில்வே துறை, பொதுமக்கள் நலனுக்காக தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் ஜூலை 15, 2025 முதல் அமலில் வரவுள்ளது.
இனி தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய, பயணிகள் IRCTC கணக்குடன் தங்களின் ஆதார் எண்ணை இணைத்து, அதனூடாக வரும் OTP மூலம் அங்கீகரிப்பு செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
✦ ஆதார் அங்கீகாரம் இல்லையெனில் தட்கல் டிக்கெட் கிடைக்காது!
IRCTC வலைத்தளம் மற்றும் செயலி வழியாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, பயணியின் IRCTC கணக்குடன் ஆதார் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். OTP சரிபார்ப்பு நடந்த பயனர்களுக்கு மட்டுமே பதிவு அனுமதி அளிக்கப்படும்.
✦ OTP சரிபார்ப்பு – ஆன்லைனும் கவுண்டரும் பாதிப்பு:
பயணிகள் ஆன்லைனில், ரயில்வே கவுண்டரில் அல்லது முகவர் மூலம் தட்கல் டிக்கெட் பதிவு செய்தாலும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் வரும் OTP ஐ உறுதிப்படுத்தவேண்டும்.
✦ பதிவு செய்யும் வழிமுறை:
www.irctc.co.in க்குச் செல்லவும் அல்லது IRCTC Mobile App திறக்கவும்
உள்நுழையவும் > My Account > “Verify User”
உங்கள் 12 இலக்க ஆதார் எண் அல்லது Virtual ID உள்ளிடவும்
“Generate OTP” ஐ கிளிக் செய்யவும்
OTP வந்ததும் உள்ளிட்டு “Submit” செய்யவும்
அதன்பின் உங்கள் IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்படும்
✦ ஏஜெண்டுகளுக்கான கட்டுப்பாடுகள்:
காலை 10:00 முதல் 10:30 வரை – ஏசி வகுப்பு தட்கல் பதிவு ஏஜெண்டுகளுக்கு அனுமதி இல்லை
காலை 11:00 முதல் 11:30 வரை – ஏசி அல்லாத வகுப்புகளும் அனுமதிக்கப்படாது
இது சாதாரண பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளை எளிதில் பெற உதவும்.
















