செய்திகள்
கவிஞர் வைரமுத்து வீட்டில் சோகம்- முதல்வர் இரங்கல்!
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் காலமானார். இறுதிச் சடங்குகள் தேனியில் நாளை மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை மாலை நடைபெறும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் “தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


















