ஆரோக்கியம்
அரிசி, பருப்பில் வண்டு? 4 மிளகாய் போதும் – முட்டுமூடியாக இருக்கும்!

கிட்சன் பராமரிப்புக்கான எளிய டிப்ஸ் – அரிசி, பருப்பு, உப்பு பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிகள்!
வீட்டில் சமையல் பொருட்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க சில நேர்த்தியான வழிமுறைகள் அவசியம். சிறிய தவறுகளால் உணவுப் பொருட்களில் வண்டுகள், பூச்சிகள் புகுந்துவிடும். இதை தவிர்க்க சில எளிய, பயனுள்ள டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
1️⃣ உப்பு ஈரமாகாமல் இருக்க – ஒரு சிறப்பு டிப்ஸ்!
உப்பை நீர்த்துப் போகாமல் பாதுகாக்க, கால் ஸ்பூன் கார்ன்ஃபிளவர் மாவை உப்பு வைக்கும் டப்பாவில் கலந்து, ஒரு சிறிய சிரட்டைக் குச்சி உள்ளே வைக்க வேண்டும். இதனால் உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.
2️⃣ அரிசி, பருப்பில் வண்டு வராமல் இருக்க – 4 மிளகாய் போதும்!
அரிசி மற்றும் பருப்பு டப்பாக்களில் 4 வரமிளகாய்கள் சேர்த்தால், வண்டுகள் தொல்லை தராது. உளுந்தம் பருப்பு போன்றவற்றில் கூடுதல் பாதுகாப்புக்கு, மிளகாயுடன் சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்த்து வைக்கலாம்.
3️⃣ புளியை நீண்ட நாட்கள் பாதுகாக்க – ஒரு சுலப வழி!
புளியை சிறிய உருண்டைகளாக உருட்டி டப்பாவில் வைக்கலாம். மேலும், இதன் மேல் சிறிதளவு கல் உப்பு தூவினால், ஈரக்கையால் எடுத்தாலும் புளி கெட்டுப் போகாது.
இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றி சமையலறையை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்!

















