வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படை அக்னிவீரர் மற்றும் மருத்துவ உதவியாளர் தேர்வு: புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீரர் மற்றும் மருத்துவ உதவியாளர் தேர்வுக்கு புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியும். அக்னிவீரர் வாயு தேர்வு மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு, 29.01.2025 அன்று, கேரள மாநிலம் கொச்சி, எர்ணாகுளம் அருகிலுள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து, 03.07.2004 முதல் 03.07.2008-க்குள் பிறந்த திருமணமாகாத ஆண்கள் கலந்துகொள்ள முடியும்.
மேலும், மருந்தாளுநர் பதவிக்கு B.Sc. Pharmacy அல்லது Diploma in Pharmacy முடித்த திருமணமாகாத ஆண்கள் (03.07.2001 முதல் 03.07.2006-க்குள் பிறந்தவர்கள்) மற்றும் திருமணமான ஆண்கள் (03.07.2001 முதல் 03.07.2004-க்குள் பிறந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீரர் வாயு தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க, 01.01.2005 முதல் 01.07.2008 வரை பிறந்த, திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் மாணவர்கள் விண்ணப்பிக்கவேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு (3 Years Diploma Engineering) முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த தேர்வை தொடர்புடைய முழு விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்க விரும்பும் பயனாளர்கள் 27.01.2025-க்குள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















