வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு +2, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ. 95,000 உதவித் தொகை வழங்கும் – விமான நிலைய பணிக்கு இலவச பயிற்சி!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு +2 மற்றும் டிகிரி முடித்த மாணவர்களுக்கு விமான நிலைய பணிக்கு தேவையான பயிற்சி மற்றும் ரூ. 95,000 உதவித் தொகையை வழங்குகிறது. இந்த பயிற்சி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படுகிறது.
தாட்கோ இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய தேவையான பயிற்சிகளை வழங்குகிறது. இந்த பயிற்சிகள் சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANDA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு பேசர் கிரவுண்ட் சேவைகள், பயணிகள் முன்பதிவு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்புகள், சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தாட்கோ மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு மாணவர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின சார்ந்தவராக இருக்க வேண்டும். 6 மாதம் பயிற்சி முடித்து, IATA மூலம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற முடியும்.
இந்த பயிற்சிக்கான செலவீனமாக ரூ.95,000 தாட்கோ வழங்குகிறது, மேலும் இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்தபோது, மாணவர்கள் Indigo, Air India, SpiceJet போன்ற விமான நிறுவனங்களில், சரக்கு ஏற்றுமதி, சுற்றுலா துறை, மற்றும் நட்சத்திர விடுதிகள் போன்ற வேலைவாய்ப்புகளை பெற முடியும்.
பயிற்சி முடித்து, ஆரம்ப கால ஊதியம் ரூ.20,000 – ரூ.22,000 வரை இருக்கும். திறமைக்கு ஏற்ப, ஊதியம் ரூ.50,000 – ரூ.70,000 வரை உயரக்கூடும்.
பதிவு செய்யும் முறை: இந்த பயிற்சிக்கான பதிவு, www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் செய்யலாம்.
தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த சிறந்த வாய்ப்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை பெற்றிட உதவும். இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல் பதிவு செய்யுங்கள்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















