ஆன்மீகம்
செவ்வாய் பெயர்ச்சி 2025: ஜூலை 28ல் கன்னியில் செவ்வாய் – சிம்மம், தனுசு, மீனம் ராசிக்கு அதிர்ஷ்ட காலம்!

செவ்வாய் பெயர்ச்சி 2025:
தைரியம், வீரத்திற்கு உரிய செவ்வாய் கிரகம், ஜூலை 28, 2025 மாலை 7.58 மணிக்கு கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இந்த பெயர்ச்சி மூலம் சில ராசிக்காரர்களுக்கு பண வரவு, தொழில் வளர்ச்சி, கௌரவம் போன்ற பலன் கிடைக்கும்.
ஜோதிடக் கணிப்பின்படி, செவ்வாய் எந்த ராசியில் பிரவேசிக்கிறானோ, அங்கு தங்கிய காலத்துக்கேற்ப வாழ்க்கையில் பலன்கள் மாறுபடும். தற்போது கன்னி ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி, குறிப்பாக சிம்மம், தனுசு, மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை தரும்.
சிம்மம் (Leo):
இரண்டாம் வீட்டில் செவ்வாய் வந்து அமர இருப்பதால் பணம், செல்வம் சம்பந்தமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத இடமிருந்து பண வரவு உண்டு. புதிய தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த காலம். சேமிப்பு மற்றும் முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் பெருமிதம் மற்றும் மதிப்பு உயரும்.
தனுசு (Sagittarius):
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மூலம் பதவி உயர்வு, செல்வாக்கு கிடைக்கும். அதிகாரப் பொறுப்புகள் கிடைக்கும். சொந்த தொழிலில் புதிய ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்கள் கிடைக்கும். பண வரவு முன்னெப்போதும் அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்களில் சாதனை ஏற்படும்.
மீனம் (Pisces):
மீன ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் இந்த செவ்வாய் பெயர்ச்சியில் ஏற்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்பு வரும். திருமணமானவர்களுக்கு துணை ஆதரவு, சந்தோஷம் கிடைக்கும். சமூக அந்தஸ்து, மரியாதை கூடும். வாழ்க்கையில் உற்சாகம், உந்துசக்தி அதிகரிக்கும்.
பரிகாரம்:
செவ்வாய் பகவானின் அருளை பெற சேய் முருகனை வழிபட்டு, செவ்வாய் காயத்ரி மந்திரம் சொல்லுவது நன்மை தரும்.




















