Connect with us

கிரிக்கெட்

INDvENG- ‘சும்மா பிட்ச் சரியில்லைன்லாம் புலம்பினு இருக்காதீங்க!’- இங்கி., அணியை வறுத்தெடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ்

Published

on

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள புத்தம் புதிய நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் இரண்டே நாட்களில் முடிந்தது. இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து மோடி மைதானத்தின் பிட்ச் சரியில்லை என்றும், இந்தியாவுக்குச் சாதகமாக அது அமைக்கப்பட்டு உள்ளது என்றும் இங்கிலாந்து தரப்பின் பல இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு எழுப்பினார்கள். இது குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்.

மூன்றாவது போட்டியைப் போல நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற நிலையில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன் இடத்தை உறுதி செய்துவிடும். 

4 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம், 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ரிச்சர்ட்ஸ் பிட்ச் குறித்தான சர்ச்சை குறித்துப் பேசுகையில், ‘இந்தியாவுக்குப் பயணம் செய்தால் இதைப் போன்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சுகள் தான் இருக்கும் என்பது தான் நிதர்சணமான உண்மை. இதை இங்கிலாந்து அணி புரிந்து கொள்ள வேண்டும். 

அதை விடுத்து, பிட்ச் சரியில்லை, அடுகளம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் மனவோட்டத்தையும், மன வலிமையையும் சோதனை செய்யும் களம் டெஸ்ட் கிரிக்கெட். அதனால் தான் அதற்குப் பெயரே அப்படி வைக்கப்பட்டுள்ளது. 

நான் இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் கண்டிப்பாக 4வது டெஸ்ட் போட்டிக்கும் பிட்ச்-ஐ பெருமளவு மாற்ற மாட்டேன். அப்படியே இருக்கும்படி தான் செய்வேன். இங்கிலாந்து அணி, தனது கம்ஃபர்ட் தளத்திலிருந்து வெளியே வந்து விளையாட்டை அணுக வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளார். 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?