Connect with us

வணிகம்

இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை!

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மீண்டும் விமான பயணிகள் எண்ணிக்கை ‘V’ வடிவில் அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக மக்களவை உறுப்பினரான தயாநிதி மாறன், விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் கட்டுமான திட்டங்களும் சரிவர இல்லை. விமான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் பயணிகள் விமானங்களைத் தவறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான முனையம் எப்போது திறக்கப்படும் எனக் கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அந்த கேள்விகளுக்குப் பதில் அளித்த மான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தினசரி விமான பயணிகளின் எண்ணிக்கை 4.07 லட்சமாக இருந்தது. அதுவே இப்போது புதிய உட்சமாக 4.17 லட்சமாக அதிகரித்துள்ளது

கொரோனாவுக்கு பிறகு மீண்டும் விமானப் பயணம் தொடங்கிய போது, அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்களில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய விமான போக்குவரத்துத் துறை அதனைத் திறம்படச் சமாளித்து உள்ளது.

இந்தியாவில் விமான பயணத்தை மேலும் சீராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஏற்பட்டு வரும் விமான டிராஃபிக்கை சரி செய்ய விமான நிலைய ஆப்ரேட்டர்கள், குடியேற்றம், சிஎஸ்ஐஎஃப் அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. விரைவில் தற்போது உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படும்.

சென்னை, கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், ராஜ்கோட், விஜயவாடா, ராய்பூர் மற்றும் அம்ரிஸ்டர் உள்ளிட்ட 11 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் குத்தகைக்கு விரைவில் விடப்பட உள்ளது. அதன் மூலமாக மத்திய அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும்” எனவும் சிந்தியா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 11-ம் தேதி கோவா மாநிலத்தின் 2வது சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதுவரையில் கோவா செல்லும் விமானங்கள் அங்குள்ள ராணுவ விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?