Connect with us

வணிகம்

திவால் நிலையில் வோடாபோன் ஐடியா.. 33% பங்குகளை வாங்கும் மத்திய அரசு..!

Published

on

வோடாபோன் ஐடியா திவாலாவதைத் தடுக்க அதன் பங்குகளை இந்திய அரசு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஒரு நேரத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்த வோடாபோன், ஜியோ வருகைக்குப் பிறகு பெரும் சரிவைச் சந்தித்தது.

தொடர்ந்து தன்னை போலவே ஜியோவில் அலையில் சிக்கித் தவித்து வந்த ஐடியாவுடன் இணைந்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இப்போது போராடி வருகிறது.

ஆனாலும் வோடாபோன் நிறுவனம் வாங்கிய ஸ்பெக்டர்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், ஹட்ச் நிறுவனத்தைக் கைப்பற்றிய போது செலுத்த வேண்டிய வரி பாக்கி என பல்வேறு சிக்கல்கள் வோடாபோனை சூழ்ந்த நிலையில் அவற்றிலிருந்து மீள முடியாமல் உள்ளது.

தங்களது பிரதான போட்டி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் இரண்டும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு 5ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிலையில், இன்னும் ஒரு நகரத்தில் கூட வோடாபோன் ஐடியாவால் 5ஜி சேவையை வழங்க முடியவில்லை.

இப்படியே சென்றால் அரசுக்கு வரும் பணமும் கிடைக்காது, நிறுவனமும் திவாலாகிவிடும் சூழல் ஏற்பட்டதால், தங்களது வோடாபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைக்கு அதன் பங்குகளை வாங்கிக்கொள்ள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் வோடாபோன் நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் அரசுக்குக் கிடைக்கும். மேலும் வோடாபோன் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள நிறுவனமாகவும் அரசு உருவெடுக்கும்.

இது பெரும் நிதி நெருக்கடியில் உள்ள வோடாபோன் ஐடியாவுக்கு பெரும் உதவியாகவும் இருக்கும். ஏற்கனவே அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்கும் போது, அதனை 4ஜி, 5ஜி சேவை வழங்க அனுமதிக்காமல் இப்படி திவாலாக உள்ள நிறுவனத்தின் பங்குகளை ஏன் அரசு வாங்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

சினிமா செய்திகள்3 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்3 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்4 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்4 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா6 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு8 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized9 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு10 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா12 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு13 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!