செய்திகள்
அன்பு கரங்கள் திட்டம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 – விண்ணப்பிக்கும் முறை!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அன்பு கரங்கள் (Anbu Karangal Scheme) திட்டத்தின் மூலம் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம், பெற்றோரை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், பாதுகாப்பாக வாழவும் அரசு முன்னெடுப்பு எடுத்து வருகிறது.
👉 யார் விண்ணப்பிக்கலாம்?
பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்
பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் பராமரிக்க முடியாதவர்கள்
பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொருவர் மாற்றுத்திறனாளி ஆக இருப்பின்
பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொருவர் சிறையில் இருந்தால்
பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டால்
👉 விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
குடும்ப அடை நகல்
குழந்தையின் ஆதார் அட்டை
வயது சான்று
குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகம்
தகுதியுடைய குழந்தைகள், உங்களுடன் ஸ்டாலின் முகாம் (Ungaludan Stalin Camp) நிகழ்வுகளில் கலந்து கொண்டு, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். பள்ளி படிப்பு முடிந்ததும், கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















