உலகம்
கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!
Published
1 மணி நேரம் agoon
By
Poovizhi
மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் போர் பதற்றம் உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, Strait of Hormuz பகுதியில் ஏற்பட்ட சிக்கல்களால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பிறகு, கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. இதன் விளைவாக, Brent Crude விலை பேரலுக்கு சுமார் 96.50 டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல் WTI Crude Oil விலையும் 90 டாலரை எட்டியுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எரிபொருள் விநியோக சங்கிலி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், United Arab Emirates முக்கியமான முடிவை பரிசீலித்து வருகிறது. அதாவது, கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக Chinese Yuan பயன்படுத்தும் வாய்ப்பை ஆராய்கிறது.
அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மற்றும் உலக சந்தை நிலைமைகள் காரணமாக, எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் மாறுபாடுகளை சந்திக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















