வணிகம்
எலன் மஸ்க் வெளியிட்ட Grok 4 – “அற்புத முன்னேற்றம்” என பாராட்டிய சுந்தர் பிச்சை!

Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, எலன் மஸ்க்கின் xAI நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புது தலைமுறை ஜெனரேட்டிவ் ஏ.ஐ. மாடல் Grok 4 பற்றி பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
Grok 4 என்பது மல்டிமோடல் ஜெனரேட்டிவ் ஏ.ஐ. மாடல் ஆகும். இது உரையும் (text), படங்களையும் (images) புரிந்து செயலாக்கும் திறன் பெற்றது. இதில் Eve எனப்படும், பிரிட்டிஷ் உச்சரிப்பில் பேசும் வோய்ஸ் அசிஸ்டென்ட் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை தனது சமூக ஊடகமான X (முன்னாள் Twitter) மூலம் எலன் மஸ்க்கை “Impressive progress” எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். எலன் மஸ்க் அதற்கு பதிலளித்து நன்றி தெரிவித்தார்.
xAI நிறுவனத்தின் புதிய முயற்சி தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுந்தர் பிச்சை மற்றும் எலன் மஸ்க் ஆகியோரின் பரஸ்பர நட்பு மற்றும் தொழில்நுட்ப பார்வை இந்த உரையாடலில் வெளிப்பட்டுள்ளது.






















