Connect with us

சினிமா

சோம்பிலேண்ட்-1 விமர்சனம்… அமெரிக்காவின் சோம்பி உலகத்துக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம்…

Published

on

முழுவதும் சோம்பிகள் நிறைந்த அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருந்து தொலைந்து போன தன்னுடைய குடும்பத்தை தேடும் இளைஞன், தொலைந்த தன்னுடைய நாயைத் தேடித் அலையும் ஒரு நடுத்தர வயது மனிதன், நகரின் ஒரு பகுதியில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல நினைக்கும் சகோதரிகள் இவர்களும் இணைந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் சோம்பி லேண்டை கடந்து தாங்கள் நினைத்ததை முடித்தார்கள் என்பதை கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் கலந்து சொல்லும் படம் தான் 2009ம் ஆண்டில் வெளியான சோம்பி லேண்ட்.

கொலம்பசாக நவ் யூ சீ மி நாயகன் ஜெஸ்ஸி எய்சென்பர்க், டல்லாஹச்சேவாக ஹாலிவுட்டின் ஆக்சன் கிங் வுட்டி, விச்சிதாவாக அழகி எம்மா வாட்சன், அவரது சகோதரி லிட்டில் ராக்காக அபிகெய்ல் இவர்கள் நால்வர் மட்டும்தான் இந்தப் படம் முழுவதும். இந்தப் படத்தில் வரும் மற்ற அனைவரும் எப்போதும் யாருடைய குரல்வளையை கடித்து, நரம்பை இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று பேருக்கும் தனித்தனி பிளாஸ் பேக், ஒருவருக்கொருவர் சின்ன சின்னதாக நம்பிக்கை துரோகம், அதில் கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் எனப் படம் நகர்கிறது.

சோம்பிகளிடம் இருந்து தப்பிக்க இதயத்தில் சுடவேண்டும், ஒருமுறைக்கு இருமுறை சோம்பிகளை கொல்ல வேண்டும், பொது இடங்களில் அதுவும் டாய்லெட்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என வரும் சில விதிகள் 1, 2, 3, 4, 18, 17, 31 என ஏதோ வரிசையில் வருகிறது. எம்மா வாட்சன் பொய் சொல்லி ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் காட்சிகள் என சில இடங்களில் நகைச்சுவை செட் ஆகியிருக்கிறது.

வழக்கமான சோம்பி படம் தான். பெரிய அளவில் எந்தவித ட்விஸ்டும், சுவாரஸ்யமும் இல்லாமல்தான் படம் நகர்கிறது. காட்சிகளிலும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் அதிகம். எம்மா வாட்சனுக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையே இறுதியில் காதல் என அதே பழக்கப்பட்ட காட்சிகள்.

பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அட்வென்சர் மற்றும் ஆக்சன் பட ரசிகர்களை ஓரளவு இந்தப்படம் கவரும். அப்போ எதுக்கு இப்போ இந்த படத்தைப் பற்றி பேசுகிறோம் என்று பார்க்கிறீர்களா… இந்த வாரம் சோம்பி லேண்ட் டபுள் டேப் என்ற இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான்.

வேலைவாய்ப்பு1 hour ago

ஆண்டுக்கு ரூ.8,17,400/- சம்பளத்தில் RailTel-ல் வேலைவாய்ப்பு!

இந்தியா1 hour ago

8 இந்திய நிறுவனங்களில் இருந்து 9000 ஊழியர்கள் வேலைநீக்கம்.. எந்தெந்த நிறுவனங்களில் இருந்து எத்தனை பேர்?

வேலைவாய்ப்பு1 hour ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

இந்தியா1 hour ago

ரூ.2 லட்சம் கோடி நிறுவனத்தின் சி.இ.ஓ.. தினமும் ரூ.35,000 சம்பளம் பெறும் பெண்..!

வேலைவாய்ப்பு1 hour ago

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

ரூ.45,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

வேளாண் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

தமிழகத்தில் IARI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா3 hours ago

ரூ.3200 சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை, இன்று ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர்.. உழைப்பால் உயர்ந்த ரேணு..!

உலகம்3 hours ago

வேலை தேடித்தரும் நிறுவனத்திலேயே வேலைநீக்க நடவடிக்கை.. 2200 ஊழியர்களின் வேலை காலி..!

பர்சனல் பைனான்ஸ்7 days ago

மாதம் ரூ.1 லட்சம் பென்சன் வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசியை எடுங்கள்..!

வணிகம்6 days ago

மின்னல் வேகத்தில் இருக்கு இன்று தங்கம் விலை (19/03/2023)!

வணிகம்6 days ago

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை (18/03/2023)!

வேலைவாய்ப்பு6 days ago

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 5369

உலகம்7 days ago

முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. மீண்டும் பிஸியாகும் அலுவலகங்கள்..!

உலகம்7 days ago

கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தி ஹேக்கிங்? வங்கி கணக்கில் நூதன திருட்டு..!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

உலகம்4 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

வணிகம்5 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!