வேலைவாய்ப்பு
நீதிமன்றத்தில் வேலை வேண்டும்? உடனே விண்ணப்பியுங்கள்!

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள் 32 உள்ளது. இதற்கு அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், மசால்சி, சுருக்கெழுத்தோர் தட்டச்சர், கணிப்பொறி ஆப்ரேட்டர், துப்புரவு வேலைக்கு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: அலுவலக உதவியாளர் – 23
வேலை: இரவுக்காவலர், மசால்சி – 07
வேலை: துப்புரவு பணியாளர் – 01
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை
வேலை: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-II – 07(தற்காலிக வேலை)
வேலை: கம்பியூட்டர் ஆப்ரேட்டர் – 01
மாத சம்பளம்: ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரை
கல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என அவரவர்கள் சம்மந்தப்பட்ட தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627 002
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டண சலுகை போன்ற முழு விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.03.2019











