
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி...

மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார். 2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின்...

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் 2 நாட்கள் சோதனை நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வருமான வரி சோதனை, பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால்...

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி, ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று மாலை மும்பையிலிருந்து, தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “ அமிதாப் பச்சன்...

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கூறும் இடமாக மாறியுள்ள மீ டூவை ஃபேஷன் ஸ்டேட்மென்டாக மாற்ற வேண்டாம் என ஜனனி கூறியுள்ளார். ’மீ டூ என்பது உண்மையிலேயே பெண்களுக்குத் தேவையான நல்லவிஷயம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒருவிஷயம்,இந்த மீ டூ என்பது ஏதோ சினிமாத்துறையில் மட்டுமே இருக்கிறது, சினிமாத்துறையில் மட்டுமே பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்றுநினைக்காதீர்கள். எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. இன்னும் நிறைய பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தைரியமாகச் சொல்ல முன்வரவேண்டும். அதேசமயம், வெறும் பரபரப்புநியூஸ் கிளப்புவதற்காகவோ பிடிக்காதவர்களை மாட்டிவிடுவதற்காகவோ, சென்சேஷனலை உருவாக்குவதற்காகவோ இந்த மீ டூவைதயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இன்னொரு விஷயம்… ஆறு மாதம் கழித்து சொல்வது, ஆறு வருடங்கள் கழித்து சொல்வது என்றெல்லாம் இல்லாமல், உங்களுக்குத் தொல்லைகொடுத்த உடனே சொல்லுங்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது தைரியமாக புகார் கொடுங்கள்’ என பிக்பாஸ் புகழ் ஜனனி தெரிவித்துள்ளார்.