ஆன்மீகம்
சனி சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: ஜூலை 18 முதல் இவை மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வேத ஜோதிடக் கணிப்பின்படி, நவகிரகங்கள் இணையும் போது சில யோகங்களும், அசுப யோகங்களும் உருவாகின்றன. இது மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஜூலை 18, 2025 அன்று சந்திரன் மீன ராசியில் சனி பகவானுடன் இணைகிறார். இதனால் ‘விஷ யோகம்’ என்ற கடுமையான யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கப்போகிறது. குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி சந்திரன் இணைவு ஏற்படுவதால், இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்க வாய்ப்பு குறைவு. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகும். சொத்துப் பிரச்சனைகள் மற்றும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் 12-ஆம் வீட்டில் சனி சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் ஏற்படுகிறது. இது நிதி இழப்புகளை ஏற்படுத்தும். பணியிடத்தில் தலைவர்கள் மற்றும் மேலாளர்களுடன் மோதல் ஏற்படும். தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்பு உள்ளது. கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் இந்த நாட்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் 3-ஆம் வீட்டில் விஷ யோகம் உருவாகிறது. இதனால் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையில்லாத பயணங்களால் மன உளைச்சலும், ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும். பழைய நோய்கள் மீண்டும் தொற்றலாம். மருத்துவச் செலவுகள் கூடும்.
எச்சரிக்கை:
இந்த மூன்று ராசிக்காரர்கள் ஜூலை 18 முதல் அடுத்த சில நாட்கள் வரை முக்கிய முடிவுகளை தவிர்க்கவும், எதையும் நிதானமாக செய்யவும் பரிந்துரை செய்யப்படுகிறது.













