வணிகம்
பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்தால் 1% கட்டணக் கழிவு – ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது!
Published
6 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழகத்தில் பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்யும் போது 1% பதிவுக் கட்டணக் கழிவு – ஏப்ரல் 1 முதல் அமல்!
தமிழக அரசு, பெண்களுக்கு சொத்துரிமையை உறுதி செய்வதற்காக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பெண்கள் பெயரில் வீடு, மனை அல்லது விவசாய நிலம் பதிவு செய்யும் போது, 1% பத்திரப் பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இச்சலுகை குறிப்பாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்குள் உள்ள சொத்துகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம், பெண்கள் சொத்து உரிமை பெறும் வாய்ப்புகளை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு ஏற்கனவே சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய நடைமுறை ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.
நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது, “மகளிருக்கு சமூக மற்றும் குடும்பத்திலான சமபங்கை உறுதி செய்யும் விதமாக, 10 லட்சம் ரூபாய் வரையிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், 1% கட்டணக் கழிவு வழங்கப்படும். தற்போது நடைபெறும் சொத்து பதிவுகளில் 75% மக்களுக்கு இந்த சலுகை பயனளிக்கும்” என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அரசாணை மூலம், பெண்கள் சொத்து பதிவு செய்வதை ஊக்குவித்து, அவர்களின் உரிமைகளை வலுப்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
