வேலைவாய்ப்பு
“பட்டதாரிகளுக்கு சிறப்புவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்சூரன்ஸில் 500 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!”

பட்டம் இருந்தா போதும்..! நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் – ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்தியாவின் முன்னணி பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனி (NIACL), 2025ம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அந்தந்த மாநில மொழியில் பரிச்சயம் இருக்க வேண்டும்.
🔹 வயது வரம்பு:
01.06.2025 விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சலுகைகள்:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள்
🔹 மாத உத்தியொகை: ரூ.9000
🔹 தேர்வு முறை: கணினி வழி ஆன்லைன் தேர்வின் மூலம்
🔹 விண்ணப்ப முறை: ஆன்லைனில் மட்டும் – https://www.newindia.co.in/
🔹 விண்ணப்ப தொடக்கம்: ஜூன் 6, 2025
🔹 கடைசி தேதி: ஜூன் 20, 2025
பட்டதாரிகளுக்கான இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பியுங்கள்!










