ஜோதிடம்
புதிய ஆண்டு ராசி பலன் 2025: இந்த ராசிகாரர்களுக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்…!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
New Year Rasi Palan 2025: இந்த ராசிகாரர்களுக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்… வேலை வாய்ப்பால் உச்சத்தை நோக்கி செல்லும் ராசிகள் இவை…
2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்கள்: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்
2025 ஆம் ஆண்டின் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன்களை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ஜோதிட கணிப்பாளர் கணித்து கூறியுள்ளார்.
துலாம் ராசி: இந்த ஆண்டு துலாம் ராசி அன்பர்களுக்கான நற்காலம் தொடங்குகிறது. புதிய தொழில் தொடங்கவும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துகளில் தடைகள் நீங்கும். சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியம் உண்டாகும். வண்டி மற்றும் வாகன வாய்ப்புகள் ஏற்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்காக கடன் எடுக்க நேரிடும், ஆனால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். வாழ்க்கைத் துணையினால் லாபம் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வயிற்றில் கோளாறுகள் ஏற்படும், ஆண்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு ஆபரேஷன் நடக்கும். மே மாதம் வரை புதிய ஒப்பந்தங்கள் அல்லது முதலீடுகள் செய்ய வேண்டாம். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு நன்மை பெற வேண்டும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றத்தின் பாதையில் செல்லும் நேரம். எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை நாடி வரும். தொழிலில் மேன்மை பெறுவீர்கள். ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள் உங்களுக்கு உயர்வைத் தரும். சகோதரர்களுடன் உள்ள மனக்கசப்புகள் தீரும். ஜூன் மற்றும் ஜூலையில் உடல் நலத்தை கவனிக்கவும். ஆன்மீக செலவுகள் ஏற்படும். வேலை தேடுகிற பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் நிகழும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும். நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு தடை நீங்கும். மேலும், முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யவும்.
தனுசு ராசி: தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு நன்மையை தரும், ஆனால் தொடக்கத்தில் கவனம் தேவை. முதற்கூறி 4 மாதங்கள் நீங்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் காணலாம், கடன் பெற வேண்டிய சூழல் உருவாகும். ஆண்டு முழுவதும் எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வீடு கட்டும் வாய்ப்புகள் இருக்கும். சிலருக்கு தாய் வழி சொத்துகளில் ஆதாயம் உண்டு. கர்ப்பிணி பெண்கள் மே மாதத்திற்குள் கவனமாக இருக்க வேண்டும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை மாமா அல்லது உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பெரும் நன்மையை பெறுவார்கள். சிவ ஆலயங்களுக்குச் சென்று தட்சணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

அட்சய திருதியை கஜகேசரி ராஜயோகம்: ஏப்.19ல் 4 ராசிகளுக்கு செல்வம், தங்கம் வாங்கும் அதிர்ஷ்டம்!

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: உத்தரட்டாதியில் செவ்வாய்! ஏப்.23 வரை 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

சனி தோஷம் குறைகிறது: சுக்கிரன்–சனி இணைப்பால் அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் நேரடி இயக்கம்: இந்த 3 ராசிகளுக்கு டபுள் அதிர்ஷ்ட காலம்!

இன்றைய ராசிபலன் 20.02.2026: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்?















