Connect with us

கிரிக்கெட்

சென்னை டெஸ்ட் குறித்து வருத்தம் தெரிவித்த நடராஜன்!

Published

on

பிப்ரவரி 5ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் புகழ் நடராஜன் சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது தனக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்

இந்திய அணியுடன் சென்னை டெஸ்டில் விளையாடாமல் இருப்பதற்கு மனம் கஷ்டமாக இருக்கிறது என்றும், கடந்த சில மாதங்களாக அணியுடன் இருந்துவிட்டு தற்போது அணியில் இருந்து விலகி இருப்பது கடினமானதாக உள்ளது என்றும் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஆறு மாதங்கள் நான் குடும்பத்துடன் இல்லாததால் இந்த ஓய்வு எனக்கு அவசியம் தேவைப்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

சொந்த மண்ணான சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறாதது நிச்சயம் வருத்தம்தான் என்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்

மேலும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவங்களிலும் நான் விளையாட விரும்புகிறேன் என்றும், அதற்காக என்னை நான் தயார் செய்து கொள்கிறேன் என்றும், எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது என்றும், பயிற்சியாளர் பாரத் அருண் அவர்கள் எனக்கு சிறப்பான பயிற்சியை கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது என்பதும் இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் 50% அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?