ஆன்மீகம்
அமாவாசை தினத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்: இவர்களின் ஆளுமை இப்படித்தான் இருக்கும்!

வேத ஜோதிடத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறந்த நாள் மற்றும் திதி அவர்களின் ஆளுமை, மனநிலை மற்றும் வாழ்க்கைப் பாதையை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் நாளே அமாவாசை திதி. இந்த திதியில் ஒன்பது கிரகங்களும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பதால், அந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே அதிக அறிவாற்றல் மற்றும் கூர்மையான சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள், வாய்ப்புக்காக காத்திருப்பவர்களாக அல்லாமல், தங்களுக்கே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் மூளை பலம் அதிகமாக இருப்பதால், சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிக்கும் திறன் இவர்களிடம் காணப்படும்.
அமாவாசை மற்றும் பெளர்ணமி திதிகளில் பிறந்தவர்களுக்கு தாராள மனப்பான்மை அதிகம். சுயநலம் குறைவாக இருக்கும். பிறர் இவர்களின் திறமையை அங்கீகரிக்கவில்லை என்றாலும், அதற்காக மனம் தளராமல், தங்களைத் தலைவர்களாக அல்லது வெற்றியாளர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதி இவர்களிடம் இருக்கும். இதனால் சிலர் இவர்களை ஆணவக்காரர்களாக தவறாக புரிந்து கொள்வதும் உண்டு.
மேலும், அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த தந்திரம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கே புரியாது. சில நேரங்களில், இவர்கள் சொன்ன வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் பல ஆண்டுகள் கழித்தே பிறருக்கு புரியும் அளவுக்கு ஆழமான சிந்தனை இவர்களிடம் இருக்கும்.
இவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கே இவர்களின் உண்மையான குணம் தெரியும். சில நேரங்களில், அமாவாசையில் பிறந்தவர்கள் செய்யும் திட்டமிடல்கள், அவர்களுடன் இருப்பவர்களுக்கே உடனடியாக புரியாமல் போகலாம்.
அமாவாசை தினத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் எப்போதும் ஏதோ ஒரு தேடல் அல்லது மனவருத்தம் இருந்து கொண்டே இருக்கும். தாங்கள் சாதித்ததைப் பார்த்தும் திருப்தி அடையாமல், இன்னும் பெரிய சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். இதற்கு காரணம், மனோகாரகனான சந்திரன் அமாவாசை தினத்தில் வலுவிழப்பதாக ஜோதிடம் கூறுகிறது.
இதன் காரணமாக, சாதனையாளர்களாக இருந்தாலும் கூட, தங்களின் வாழ்க்கையில் முழு திருப்தி இல்லை என்ற உணர்வு இவர்களை தொடர்ந்து வாட்டும். இந்த மன சஞ்சலமே அவர்களை தொடர்ந்து முன்னேற தூண்டுகிறது.
அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள், பிறரின் மனதை எளிதாக கவரும் திறன் கொண்டவர்கள். இவர்களின் அறிவு, செயல்பாடு மற்றும் பேச்சுத் திறன் மூலம், பிறரின் நம்பிக்கையையும் மனதையும் ‘திருடும்’ வல்லமை இவர்களிடம் இருக்கும். ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக நிலைத்திருக்கும் குணமும் இவர்களின் முக்கிய அடையாளம்.
சந்திரன் வலுவிழந்திருப்பதன் காரணமாக, இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சில குழப்பமான எண்ணங்கள் ஏற்படலாம். நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலும் கூட, இன்னும் சிறந்த துணை கிடைத்திருக்கலாம் என்ற எண்ணம் மனதில் தோன்ற வாய்ப்புள்ளது.
அதேபோல், எவ்வளவு சுவையான உணவை உண்டாலும் அதில் முழு திருப்தி அடையாமல், ஏதாவது குறை கூறும் பழக்கம் இருக்கலாம். ஆனால் பெற்றோரை மதித்து நேசிப்பவர்களாகவும், எதிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்களாகவும் அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள், அமாவாசை பிறந்தவர்களின் குணாதிசயங்கள், அமாவாசை ஜோதிடம் பலன்கள், அமாவாசை திதி பிறப்பு ரகசியங்கள், அமாவாசை பெளர்ணமி பிறந்தவர்கள், சந்திரன் வலுவிழப்பு பலன்கள், Amavasai born personality, Amavasya born characteristics, Amavasya astrology benefits, Personality traits of Amavasya born, Moon weak effects astrology, Amavasya birth astrology














