இந்தியா
முகேஷ் அம்பானி வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கார்: கொலை செய்ய திட்டமா?

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராகிய முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கூடிய கார் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு இருந்துவரும் நிலையில் அவருடைய வீட்டின் அருகே இன்று காலை மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த காரை பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில் பயங்கர வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பை முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் நின்ற வெடிபொருட்களுடன் கூடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
முகேஷ் அம்பானி வீட்டின் முன் பயங்கர வெடி பொருட்களுடன் இருந்த கார் அவரை கொலை செய்ய வந்ததா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
























