ஆன்மீகம்
அக்டோபர் 18-ம் தேதி குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் மற்றும் நன்மைகள்!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிக முக்கியமானவை. அவை ஒவ்வொரு ராசிக்காரரின் வாழ்க்கையிலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கோடிகளை அள்ளிக்கொடுக்கும் குருபகவான் அக்டோபர் 18-ம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த குருபெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அற்புதமான பலன்களை தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குருபகவான் பெரும்பாலும் நிதி சிக்கல்களைத் தீர்த்து, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறார். இந்த பெயர்ச்சி 45 நாட்கள் கடக ராசியில் தொடரும் (டிசம்பர் 5, 2025 வரை). தற்பொழுது குரு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பயணத்தை தொடங்குகிறார். தீபாவளிக்கு முன்னதாக நிகழும் இந்த பெயர்ச்சி, சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் சிறந்த காலத்தின் தொடக்கமாக அமையும்.
மிதுனம்:
குரு மிதுன ராசியை விட்டு செல்லும் போது மிதுன ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து அதிக லாபத்தை பெற முடியும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும், நிதி நிலைமை உறுதியானதாக இருக்கும். பழைய பிரச்சினைகளை சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது தீரும்.
கடகம்:
குருபெயர்ச்சி கடக ராசியில் லக்கினில் நடைபெறுவதால், நன்மைகள் இரட்டிக்கப்படும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரும் சம்பாதிக்க முடியும், நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கும். முதலீடுகளில் பலன்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்பு. உடல் மற்றும் மனரீதியாக வலிமை பெறுவர். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
கன்னி:
நீண்டகால நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய சொத்துகள் மற்றும் வாகனங்களை வாங்க வாய்ப்பு. வேலையில் பதவி உயர்வு ஏற்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் பாராட்டப்படும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகளும் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பெரும் சம்பாதிப்பார்கள். நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கும். முதலீடுகளில் நன்மைகள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி. உடல் மற்றும் மன ரீதியாக வலிமை பெறுவார்கள். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.





















