செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் – முழு பட்டியல் இங்கே!

புதிய விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய தகவல்:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் ஜூலை 15 முதல் 30 தேதி வரை தமிழகமெங்கும் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்கள் மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் சேர ரேஷன் அட்டை கட்டாயமாக தேவை.
விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்:
✅ ரேஷன் அட்டை (குடும்ப அட்டை) – கட்டாயம் இருக்க வேண்டும்.
பொருள் இல்லாத ரேஷன் அட்டையுடன் விண்ணப்பிக்க இயலாது.
✅ ஆதார் அட்டை
✅ வங்கி கணக்கு எண் – ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருத்தல் அவசியம்
✅ மொபைல் எண் – வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணை வழங்க வேண்டும்
✅ தற்போதைய முகவரி மற்றும் வசிக்கும் வீட்டு வகை (சொந்தம்/வாடகை)
✅ மின் இணைப்பு எண் (EB Connection Number)
✅ திருமண நிலை
✅ மாவட்டம், ஊர், ஊராட்சி/நகராட்சி விவரங்கள்
⚠️ முக்கியக் குறிப்புகள்:
ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதுமானது இல்லை. முதலில் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வருமானச் சான்று அல்லது நில ஆவணங்கள் இணைக்க தேவையில்லை.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் கள ஆய்வின்போது வீடு காலியாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
வங்கியில் ஆதார் மற்றும் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் உடனடியாக இணைக்க பரிந்துரை செய்யப்படுகிறது.


















