வணிகம்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு – ஜனவரி 2025 முதல் அமலில்!

அரசு ஊழியர்களுக்கு இருபது சதவீத அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சரின் சுவாரஸ்ய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வரவேற்கத்தக்க நல்ல செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய அவர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இது 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலில் வரும் என்றும், தற்போதைய 53% அகவிலைப்படி தற்போது 55% ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். மத்திய அரசு DA உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.
இந்த உயர்வு மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பயனடைவார்கள். இதை செயல்படுத்த அரசு ஆண்டுக்கு கூடுதலாக ₹1,252 கோடி செலவிடவுள்ளது.
முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.














