வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் குழந்தைகள் சேவை மையத்தில் காலிப்பணியிடம் – களப்பணியாளர் தேவை!
Published
3 மாதங்கள் agoon
By
Poovizhi
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தை சேவை மையத்தில் (1098) ஒப்பந்த அடிப்படையில் களப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
பணியிட விவரங்கள்:
பணியிடம் எண்ணிக்கை: 1
சம்பளம்: ரூ. 18,000
கல்வி தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள்
வயது வரம்பு: 42 வயதிற்கு கீழ்
முன்னுரிமை: பெண்கள், குழந்தைகள் நலன் / சமூக நலன் துறையில் பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அவசர உதவி எண் மையங்களில் பணிபுரிந்தவர்கள்
கைமுறை திறன்: கணினி இயக்கும் திறன் கொண்டவர்கள்
இந்த பணியிடம் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் (https://coimbatore.nic.in/) இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் நகலுடன் சுயகையொப்பமிட்டு, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோயம்புத்தூர் மாவட்டம் – 641018
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2025, மாலை 05:45 மணி
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














