ஆன்மீகம்
பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் ஆளுமை, வாழ்க்கை பாதை மற்றும் எதிர்காலத்தை அறிய உதவுவது போலவே, பிறந்த மாதமும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் தனித்துவமான குணநலன்களைக் கொண்டிருப்பார்கள்.
மனிதர்களில் அனைவருக்கும் சுயமரியாதை உணர்வு இயல்பாக இருக்கும். ஆனால் சிலருக்கு அது அதிகமாக வெளிப்படும். இந்த அதிகமான சுய முக்கியத்துவ உணர்வே பொதுவாக “ஈகோ” என அழைக்கப்படுகிறது. ஒருவர் தங்களைப் பற்றிக் கொள்ளும் பார்வை, வாழ்க்கையை அணுகும் முறை, பிறருடன் பழகும் விதம் ஆகியவற்றில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சில மாதங்களில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மிகுதியால் அகங்காரமாக தோன்றக்கூடும். அவர்கள் அதை தன்னம்பிக்கை என நினைத்தாலும், சுற்றியுள்ளவர்களுக்கு அது ஆணவமாகப் படலாம். எந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் அதிகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
🔴 மார்ச் மாதம் பிறந்தவர்கள்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் வலுவான தலைமைத்துவ குணத்திற்கும், எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கும் பெயர் பெற்றவர்கள். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பதால் அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாகவும், போட்டித் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சவால்களை நேருக்கு நேர் சந்திக்க தயங்க மாட்டார்கள். எந்த பொறுப்பையும் தாராளமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த அணுகுமுறை சில நேரங்களில் சுயநலமாகவும், அதிக ஈகோவாகவும் பார்க்கப்படும். இருந்தாலும், அவர்களின் துணிச்சல் அவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றும்.
🟡 ஜூலை மாதம் பிறந்தவர்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே கவன ஈர்ப்பை விரும்புவர்கள். சூரியன் ஆதிக்கத்தில் இருப்பதால் அவர்கள் ராஜ மரியாதை மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள். தன்னம்பிக்கை, கவர்ச்சி, மேடைப் பேச்சுத் திறன் ஆகியவை இவர்களின் பலம். மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள். பாராட்டைப் பெற வேண்டும் என்ற ஆசை சில நேரங்களில் அகங்காரமாக வெளிப்படும்.
🔵 அக்டோபர் மாதம் பிறந்தவர்கள்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தீவிர சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு பெயர் பெற்றவர்கள். உள்ளுணர்வு வலிமை மற்றும் காந்த கவர்ச்சி இவர்களிடம் அதிகம். எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கு இவர்களுக்கு இருக்கும். மனிதர்களையும் சூழ்நிலைகளையும் தங்களது வழியில் கொண்டு செல்ல முயல்வார்கள். உறுதியான மற்றும் பிடிவாதமான குணம் காரணமாக அதிக ஈகோ கொண்டவர்களாக கருதப்படுவர். இலக்கை அடையும்போது பிறரின் கருத்துகளை அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள்.
🟢 டிசம்பர் மாதம் பிறந்தவர்கள்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள். சனி ஆதிக்கம் காரணமாக பொறுப்பு உணர்வு அதிகம். உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய உறுதியாக செயல்படுவார்கள். தங்கள் சாதனைகள் மற்றும் இலக்குகளில் அதிக கவனம் செலுத்துவதால், அது சில நேரங்களில் அதிக ஈகோவாக வெளிப்படும். அவர்களுக்கு அது சாதனை உணர்வாக இருந்தாலும், பிறருக்கு அது அகங்காரமாகத் தோன்றலாம்.














