வேலைவாய்ப்பு
இராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – 43 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Published
6 மாதங்கள் agoon
By
Poovizhi
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் – அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலகத்தின் கீழ் வட்டம் வாரியாக மொத்தம் 43 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் (Vacancy Details):
வாலாஜா – 10
சோளிங்கர் – 3
நெமிலி – 5
கலவை – 12
ஆற்காடு – 7
அரக்கோணம் – 6
மொத்தம்: 43 பணியிடங்கள்
கல்வித் தகுதி (Educational Qualification):
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
01.07.2025 நிலவரப்படி:
பொதுப்பிரிவு: 21 முதல் 32 வயது வரை
பி.சி / எம்.பி.சி / பி.சி.எம்: அதிகபட்சம் 39 வயது
எஸ்.சி / எஸ்.சி.ஏ / எஸ்.டி / ஆதரவற்ற விதவைகள்: அதிகபட்சம் 42 வயது
மாற்றுத் திறனாளிகள்: கூடுதலாக 10 ஆண்டுகள் சலுகை
சம்பளம் (Salary):
₹11,100 – ₹35,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை (Selection Process):
வாசித்தல் மற்றும் எழுத்துத் திறன் தேர்வு, பின்னர் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பதாரர்கள் https://ranipet.nic.in/recruitment-of-village-assistant-post-2025/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு நேரடியாக அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி (Important Date):
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2025
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















