ஆன்மீகம்
குரு பெயர்ச்சி 2025: இந்த 6 ராசிகளுக்கு சிக்கல்கள்! தப்பிக்க தவறவிடக்கூடாத பரிகாரங்கள்!

ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் குரு பெயர்ச்சி, 2025ஆம் ஆண்டில் மே 14ம் தேதி நடைபெற உள்ளது. குரு பகவான், புதனின் வீட்டான மிதுன ராசியில் நுழைகிறார். இந்த மாற்றம், பலருக்கு நன்மை தருவதாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 6 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
மேஷம்:
இந்த பெயர்ச்சியால், வேலை தொடர்பான இடமாற்றம் அல்லது திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரித்து, வருமானத்தை விட ஓவராகச் செல்லும். நெருக்கமான நபர்களிடம் இருந்து விலக நேரிடும். பதவி உயர்வு அல்லது வேலை வாய்ப்பு தாமதமாகலாம்.
கடகம்:
வேலையில் தடை ஏற்படக்கூடும். முக்கிய முயற்சிகளை தற்காலிகமாக நிறுத்துவது நல்லது. நேர்மையான வாழ்கைதான் தக்க வைக்கும். மனதில் ஏற்படும் நெகட்டிவ் எண்ணங்களை விலக்கு.
கன்னி:
பண வருவாயில் தடை, செலவில் அதிகரிப்பு ஆகியவை ஏற்படும். உடல்நலத்திலும் கவனம் தேவை. மன அழுத்தத்தை சமாளிக்க தியானம், யோகா செய்து மன அமைதி பெறுங்கள்.
விருச்சிகம்:
ஆரோக்கிய சிக்கல்கள் வரும். மருத்துவர் ஆலோசனை தவறவிடக்கூடாது. குடும்பத்தில் மன உளைச்சல், திடீர் செலவுகள் ஆகியவை ஏற்படக்கூடும்.
மகரம்:
இணையமான எதிரிகள் அதிகரிக்கக்கூடும். தொழில், வேலையில் சிக்கல்கள். நிதி மேலாண்மையில் கவனம் தேவை. அமைதியாகவும் தைரியமாகவும் செயல்படுவது அவசியம்.
மீனம்:
பயணங்களில் கவனம் தேவை, வாகன விபத்துக்கு வாய்ப்பு உண்டு. பண செலவுகள் கட்டுப்பாடின்றி போனால் கடன் சிக்கல்கள் உருவாகலாம்.
தப்பிக்க வேண்டிய பரிகாரங்கள்:
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி பூஜை செய்யுங்கள்.
கொண்டைக் கடலையை துருவி மாலை செய்து அர்ப்பணிக்கவும்.
மஞ்சள் மற்றும் கொண்டைக் கடலையை தானமாக வழங்குவது மிகவும் நன்மை தரும்.
தியானம், யோகா மற்றும் நிதானமான செயல்பாடு இந்த நேரத்தில் மிக முக்கியம்.















