வணிகம்
மாதம் ரூ.5,000 ஓய்வூதியம்! திருமணமாகாத மற்றும் விதவை ஆண்களுக்கான மத்திய அரசு புதிய திட்டம்!

மாதம் ரூ.5,000 பெற புதிய ஓய்வூதியத் திட்டம் – திருமணமாகாத மற்றும் விதவை ஆண்களுக்கு புதிய நம்பிக்கை
பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச பேருந்து பயணம், மாதம் ரூ.1,000 உதவித்தொகை, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்கள் வழியாக பெண்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. ஆனால், இதுவரை ஆண்களுக்கு இத்தகைய ஆதரவு குறைவாகவே இருந்தது.
இந்த பின்னணியில், மத்திய அரசு ஆண்களை கவனத்தில் கொண்டு ஒரு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், திருமணமாகாத ஆண்கள் மற்றும் மனைவியை இழந்த விதவை ஆண்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்திட்டத்திற்குத் தகுதி வாய்ந்தவர்கள்:
திருமணமாகாத ஆண்கள்
மனைவியை இழந்த விதவை ஆண்கள்
பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்
நிலையான வருமானமில்லாத ஆண்கள்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை
வருமானச் சான்றிதழ்
மனைவியின் இறப்புச் சான்றிதழ் (விதவை ஆண்களுக்கு)
விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். மேலும், மாநில சமூக நலத்துறை இணையதளம் மூலமாக அல்லது நகராட்சி/ஊராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேற்கு வங்காளம், பீகார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் இந்த திட்டத்தின் மூலம் நேரடி நன்மை பெற முடியும். தற்போது இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அரசு வட்டாரங்கள் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என உறுதிப்படுத்துகின்றன.


















