Connect with us

ஆன்மீகம்

சனி பகவானை விட மோசமான பலன்களை தரும் பகவான் யார் தெரியுமா?

Published

on

உங்களது ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் பாவ கிரகங்கள்  கெட்டிருந்தால் நிறைய தவறான விஷயங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பல பேர் சனி பகவான்தான் நிறைய கெடுபலன்களைத் தருவார் என்று பயப்படுவார்கள். அவர் மட்டுமல்ல செவ்வாய், ராகு. கேது போன்றோரும் பல சமயங்களில் கெடு பலன்களையே தருவார்கள்.

ஆனால் உங்களுக்கெல்லாம் தெரியாத ரகசியம் ஒன்று இருக்கிறது தெரியுமா?  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொல்வார்கள். ஆனால் இந்த புதன் அதாவது கல்விக்கு அதிபதி என்ற கூறப்படும் புதன் பகவான்தான் அவர்.

புத பகவான் ஒருவரது ஜாதகத்தில் கெட்டிருந்தால் அவருக்கு என்னென்ன நடக்கும் தெரியுமா?

ஒருவரது ஜாதகத்தில் புதன் கெட்டிருந்தால் அவர் சனி பகவானை விட மோசமான பலன்களையே தருவார். இவரைப் பற்றி இப்போதுதான் பல ஜோதிடர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இவர் கெட்டிருந்தால் ஒரு மனிதன் சைக்கோ என்கிற மனநோயாளியாக ஆகலாம். மருத்துவத் துறையில் Anxiety என்று கூறப்படும் மனநிலை பரபரப்பில் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி செயல்படாத நிலையில் இருக்கலாம். நரம்பியல் மண்டலங்களில் பிரச்னைகள் இருக்கலாம். உடலெல்லாம் சொறி சிரங்குகள் இருக்கலாம். யாருடனும் சேராமல் தனிமையில் அறைக்கதவை புட்டிக் கொண்டு இருக்கலாம். விட்டமின் டி மற்றம் கே பற்றாக்குறை இருக்கலாம். அதீத ஞாபக மறதி இருக்கலாம். தவறான கனவுகள் கற்பனைகளில் வாழ்க்கையை நடத்தலாம்.

இவ்வளவு தீமைகளிலிருந்தும் விடுபட என்ன பரிகாரம் என்று கேட்கிறீர்கள்தானே?

இந்த பாதிப்புகள் உடையவர்களை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பும்புகார் செல்லும் வழியில் உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

இந்த ஸ்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக சிவன்பெருமான் அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவஸ்தலமாக (Shiva Temple) விளங்குகிறது. இங்கு சிவன் சுவேதாரண்யேஸ்வரர் என்ற   பெயரிலும், அன்னை பிரம வித்தியம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறார். நவகிரக ஸ்தலங்களில் இது புதன் ஸ்தலமாக விளங்குகிறது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம், விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் மூன்று குளங்கள் அமைந்துள்ளன. பாதிக்கப்பட்ட நபரை இந்த மூன்று குளங்களுக்கும் அழைத்துச் சென்று கை, கால், முகம் கழுவி விட்டு மூலவரான சுவேதாரண்யேஸ்வரருக்கு ஒரு அர்ச்சனை செய்து வழிபட்ட பிறகு தனி சன்னதியில் உள்ள புதன் பகவானை 17 முறை வலம் வந்து 17 தீபங்கள் ஏற்றி வழிபட்டு 17 பேருக்கு உங்களால் இயன்றதை தானமாக வழங்கி விட்டு அந்த நபரை மூலவருக்கு பின்புறமுள்ள அகோரமூர்த்தி தலத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்து விட்டு வாருங்கள்.

இங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

கண்டிப்பாக அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவருக்கு நல்ல மருந்துகள் வழங்குவதற்குண்டான வழிகள் பிறக்கும். நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

புதன் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அறிவுக் குறைபாடும், கல்வியில் மந்தமான நிலையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம்.

புதன் திசையானது ஒவ்வொரு வாழ்விலும் 17 முறை நீடிக்கும். அதனால் தான் புதன் சன்னதியில் நீங்கள் 17 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் பிரகாரத்தை 17 முறை சுற்றி வர வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

முதலில் திருவெண்காடு சுவாமியையும், அதன் பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகு கடைசியாக புதனை வழிபட வேண்டும்.

பலன்கள்:

கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும். திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா16 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

இந்தியா23 minutes ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: 3, 12, 21, 30 தேதியில் பிறந்தவர்கள் ஏன் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்?

வணிகம்5 மணி நேரங்கள் ago

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இந்த நேரத்தில் யோனோ சேவையில் தடங்கல்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? முழு ராசிபலன்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஏப்ரல் 13–19): இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு இல்லாமலேயே கடன் கிடைக்குமா? இதோ எளிய வழிகள் மற்றும் முக்கிய விதிகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தண்ணீர் தொட்டிகள் ஏன் உயரத்தில் கட்டப்படுகின்றன? இதோ அதன் அறிவியல் ரகசியம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 11 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை)

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராசிபலன் இன்று (11 ஏப்ரல் 2026): 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

இந்தியா7 நாட்கள் ago

நீளிரா – ஈழ தமிழ்த் திரைப்படம் – தவிப்பு

ஆரோக்கியம்5 நாட்கள் ago

பால் புட்டி பயன்படுத்தும் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை: குழந்தை ஆரோக்கியத்திற்கான 7 அவசியமான குறிப்புகள்!

சினிமா4 நாட்கள் ago

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: விஜய்க்கு எதிரான ‘த.நா. 2026’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வீட்டிலேயே பழ ஃபேஷியல்: உடனடி பொலிவு, சுருக்கம் & கரும்புள்ளி குறைக்கும் இயற்கை ரகசியம்!

சினிமா5 நாட்கள் ago

ஏப்ரல் 10 ரிலீஸ்: தியேட்டர் & ஓடிடியில் காத்திருக்கும் புதுப்படங்கள் – முழு பட்டியல்!

இந்தியா4 நாட்கள் ago

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்

இந்தியா5 நாட்கள் ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

இந்தியா5 நாட்கள் ago

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

சினிமா4 நாட்கள் ago

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொருநை நதிக்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவில்

Translate »
fliesen bohren tipps. Making digital tools accessible for everyone. Vitour.