வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவ வாரிய வேலைவாய்ப்பு: 425 மருந்தாளுனர் பணியிடங்கள் – டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் 425 மருந்தாளுனர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 10!
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) 2025ஆம் ஆண்டுக்கான மருந்தாளுனர் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 425 மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தகுதியுடையவர்கள் மார்ச் 10, 2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் விபரம்:
🔹 பதவி: மருந்தாளுனர் (Pharmacist)
🔹 காலியிடங்கள்: 425
🔹 சம்பளம்: ரூ. 35,400 – ரூ. 1,30,400
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma in Pharmacy (D.Pharm), Bachelor of Pharmacy (B.Pharm) அல்லது Doctor of Pharmacy (Pharm. D) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.07.2025 தேதியின்படி):
✔ பொது பிரிவு: 18 – 32 வயது
✔ எஸ்.சி / எஸ்.டி/ எஸ்.சி.ஏ/ எம்.பி.சி/ பி.சி.எம்/ பி.சி பிரிவினர்: 18 – 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
📌 முதல் நிலை: தமிழ் மொழித் தகுதித் தேர்வு – 50 மதிப்பெண்கள் (குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறுதல் அவசியம்) – 1 மணி நேரம்.
📌 இரண்டாம் நிலை: மருந்தியல் சார்ந்த வினாக்கள் – 100 மதிப்பெண்கள் – 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை:
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்: http://mrbonline.in/
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025
விண்ணப்பக் கட்டணம்:
💰 பொது பிரிவினர்: ரூ. 1000
💰 எஸ்.சி / எஸ்.டி/ மாற்றுத்திறனாளி பிரிவினர்: ரூ. 500
தகுதியுள்ளவர்கள் விரைவாக மருந்தாளுனர் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்!


















