வேலைவாய்ப்பு
133 ராணுவ பணியிடங்களுக்கு 18,000-க்கும் மேல் இளைஞர்கள் குவிவு: போதிய வசதி இல்லாமல் அவதி!

133 ராணுவ பணியிடங்களுக்கு 18,000 இளைஞர்கள் – போதிய வசதி இல்லாமல் அவல நிலை!
நாட்டில் வேலைஇல்லை பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் அரசு பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ராணுவ துறையில் 133 காலியிடங்களை நிரப்புவதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்துள்ளார்கள். இத்தனை பெரும் இளைஞர்களின் வருகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு தூரத்திலிருந்து வந்த இளைஞர்கள் போதிய தங்குமிட வசதிகளும், போக்குவரத்து ஏற்பாடுகளும் இல்லாத காரணத்தால் தெருக்களிலும் மலை அடிவாரத்திலும் தங்கும் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர். இளைஞர்களின் இந்த துயரமான சூழ்நிலை வேலைவாய்ப்பு முகாம்களின் மேலாண்மையின் மீதான கேள்விகளை எழுப்புகிறது.


















