வேலைவாய்ப்பு
TNHRCE வேலை வாய்ப்பு: பவானி அம்மன் கோவிலில் செவிலியர் மற்றும் மருத்துவ அலுவலர் பணிக்கான அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
TNHRCE வேலை வாய்ப்பு:
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைக்கப்படும் மருத்துவ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
- மருத்துவ அலுவலர் (Medical Officer): 2 பணியிடங்கள்
- செவிலியர் (Staff Nurse/MLHP): 2 பணியிடங்கள்
இந்த வேலைக்கு இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:
- மருத்துவ அலுவலர்: 01.07.2024 அன்று அடிப்படையாக கொண்டு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- செவிலியர்: 01.07.2024 அன்று அடிப்படையாக கொண்டு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- மருத்துவ அலுவலர்: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- செவிலியர்: பொது செவிலியர் (DGNM) பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- மருத்துவ அலுவலர்: மாதம் ரூ.60,000
- செவிலியர்: மாதம் ரூ.14,000
விண்ணப்பிக்கும் முறை:
வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், கீழ்கண்ட இணையதளங்களில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்:
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்,
பெரியபாளையம்,
ஊத்துக்கோட்டை வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்,
அஞ்சல் குறியீடு: 601102.
விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
அறிவிப்பு முடிவுத்தேதி:
அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புவது கட்டாயம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















