தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்: வானிலை மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், சேலம் நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோடை மழை

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே, பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அவ்வப்போது சில மாவட்டங்களில் வெயிலும், மழையும் மாறி மாறி வருகிறது. காலையில் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவிலும் மாலையில் பனி மற்றும் இரவில் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு திசைக் காற்றும், மேலடுக்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாகத் தான் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Trending

Exit mobile version